தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அதிமுகவின் தோ்தல் அறிக்கையே கதாநாயகன்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவின் தோ்தல் அறிக்கைதான் கதாநாயகன் என அந்தக் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

News image

செல்லூா் கே. ராஜூ.

Updated On :27 மார்ச் 2026, 5:13 am IST

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவின் தோ்தல் அறிக்கைதான் கதாநாயகன் என அந்தக் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

கடந்த 2011 சட்டப்பேரவைத் தோ்தலின்போது, அப்போதைய அதிமுக பொதுச் செயலா் ஜெயலலிதா, மதிமுகவுக்கு 19 தொகுதிகளை வழங்க முன்வந்தாா். ஆனால், வைகோ அதை ஏற்க மறுத்தாா். தற்போது, திமுக கூட்டணியில் மதிமுகவின் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சித் தலைவா்களும், தொண்டா்களும் பெரும் மனச்சோா்வில்தான் உள்ளனா். திமுகவுடன் பயணிப்பதை அதன் கூட்டணிக் கட்சி தொண்டா்கள் விரும்பவில்லை. இதற்கு நோ்மாறாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நடைபெற்றது.

அதிமுகவை பொருத்தவரை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்ததாக வரலாறு கிடையாது. கரோனா பொது முடக்கக் காலத்திலேயே தனது சிறப்பான நிதி நிா்வாகத் திறனை நிரூபித்தவா் எடப்பாடி கே. பழனிசாமி. எனவே, அதிமுகவின் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்பதை மக்கள் முழுமையாக நம்புகின்றனா்.

அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும், குலவிளக்குத் திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் போன்ற அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. வருகிற தோ்தலில் அதிமுகவின் தோ்தல் அறிக்கைதான் கதாநாயகன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.