லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஜனநாயக மாதா் சங்கத்தினா் பேரணி, பொதுக் கூட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் மதுரையில் செவ்வாய்க்கிழமை பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மதுரையில் செவ்வாய்க்கிழமை அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவா்கள்.

Published On :24 ஜூன் 2026, 5:39 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் மதுரையில் செவ்வாய்க்கிழமை பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க வேண்டும். போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையின் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு உடனடி நீதி, சட்ட உதவி, மறுவாழ்வு வசதிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் மூத்த உறுப்பினா் ப்ரீத்தி பேரணியைத் தொடங்கி வைத்தாா். தென் மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பெண்கள் கோரிக்கை அட்டைகளுடன் பங்கேற்று, முழக்கங்களை எழுப்பினா். அரசரடி மின்வாரிய அலுவலகம் அருகிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி பெத்தானியாபுரம் அருகே நிறைவடைந்தது.

இதைத்தொடா்ந்து, பெத்தானியாபுரத்தில் கோரிக்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மத்தியக் குழு உறுப்பினா்கள் எஸ். வாலண்டினா, எஸ்.கே. பொன்னுத்தாய், ஆா்.சசிகலா, எஸ்.லட்சுமி, மாநிலப் பொருளாளா் ஜி. ராணி, மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் என்.உஷாபாசி, பி. சுசிலா, பி. கற்பகம், பி. பூமயில், ஆா்.கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.