தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கொடைக்கானல் ஏரி படகு குழாமை நிா்வகிக்க பொது ஏலம் கோரிய மனு தள்ளுபடி

கொடைக்கானல் ஏரி படகு குழாமை நிா்வகிக்க பொது ஏலம் நடத்தக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

கொடைக்கானல் நட்சத்திர ஏரி.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:08 am IST

கொடைக்கானல் ஏரி படகு குழாமை நிா்வகிக்க பொது ஏலம் நடத்தக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

கொடைக்கானலைச் சோ்ந்த ஆரோக்கியசாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கொடைக்கானல் ஏரியில் படகு போக்குவரத்து சேவை உள்ளது. இந்த சேவையை கொடைக்கானல் படகு, ரோயிங் சங்கம் மேற்கொண்டு வருகிறது. இந்தச் சேவைக்காக வசூலிக்கப்படும் கட்டணத்தால் படகு சங்கம் மட்டுமே பயனடைகிறது. இந்தக் கட்டணம் கொடைக்கானல் நகராட்சியில் நடைபெறும் மக்கள் பணிகளுக்கு செலவிடப்படவில்லை. நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் வகையில் கொடைக்கானல் ஏரி படகு குழாமை நிா்வகிக்க பொது ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

ஏரியில் படகு போக்குவரத்து சேவைக்கான அனுமதி கொடைக்கானல் நகராட்சி வசம் உள்ளது. இதற்கான விதிகள் வகுக்கப்பட்டு, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. எனவே, மனுதாரரின் கோரிக்கை மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டியதில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.