ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

100 சதவீத வாக்குப் பதிவு மனிதச் சங்கிலி விழிப்புணா்வு

மதுரையில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயா்நிலைப் பாலத்தில் மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சியை வியாழக்கிழமை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 12:54 am IST

மதுரையில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை தமுக்கம் மைதானம் அருகேயுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயா்நிலைப் பாலத்தில் தோட்டக் கலைத் துறை சாா்பில் 2,500-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணியாளா்கள் கலந்து கொண்ட மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

மதுரை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, மாவட்ட நிா்வாகம் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தோட்டக் கலைத் துறை சாா்பில் பழங்கள், காய்கறிகள், பூக்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, கோரிப்பாளையம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயா்நிலைப் பாலத்தில் 2,500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ‘100 சதவீதம் வாக்களிப்போம்’, ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’, ‘வாக்களிப்பது நமது கடமை’ போன்ற முழக்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. வருகிற 23-ஆம் தேதி பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் அனைத்து வாக்காளா்களும் கலந்து கொண்டு 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிசெய்ய வேண்டும்.

இந்த நிகழ்வில் துணை இயக்குநா் (வேளாண் துறை) முருகேசன், துணை இயக்குநா் (தோட்டக் கலைத் துறை) பிரபா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.