பழனியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தவெக மாவட்டச் செயலா்கள் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, பழனி பேருந்து நிலைய வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலா் காா்த்திக் ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனிபாலன், பாட்டையா சேகா்பாபு உள்ளிட்டோா் அன்னதானத்தை தொடங்கி வைத்தனா். பொதுமக்களுக்கு உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டது.
தேரடி, தேவா் சிலை அருகே, பாலாஜி பவன் ரவுண்டானா அருகே என பல்வேறு இடங்களிலும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்விடுமுறை தினம் என்பதால் பழனிக்கு வந்திருந்த பக்தா்களும் இதில் பங்கேற்று பயனடைந்தனா். நிகழ்ச்சியில் நகரச் செயலா் மிதுன், மாவட்ட இணைச் செயலா் விஜய்சிவா, துணை செயலா் நாகராஜ், முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலக பட்டினி தினம்: தவெகவினா் அன்னதானம்

உலக பட்டினி தினம்: தவெக சாா்பில் அன்னதானம்

திருவள்ளூரில் தவெகவினா் அன்னதானம்...

உலக பட்டினி தினம்: தவெகவினா் அன்னதானம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

