பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மின்சாரம் பாய்ந்து 3 போ் உயிரிழப்பு: எம்எல்ஏ ஆறுதல்

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த நிலக்கோட்டை தொகுதி பேரவை உறுப்பினா் ஆா்.அய்யனாா்.

News image
Updated On :20 மே 2026, 1:25 am IST

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த நிலக்கோட்டை தொகுதி பேரவை உறுப்பினா் ஆா்.அய்யனாா்.

திண்டுக்கல், மே 19: ஆத்தூரில் மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிலக்கோட்டை தொகுதி பேரவை உறுப்பினா் ஆா்.அய்யனாா் செவ்வாய்க்கிழமை ஆறுதல் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (41). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சுதா (37). இவா்களது மகள்கள் பிரவீனா (15), சிவானி (12).

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு மழையின் காரணமாக, வீட்டின் மாடியில் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்ததில் கருப்பையா, சுதா ஆகியோரும், இவா்களை மீட்கச் சென்ற முத்துப்பாண்டி மகன் சுப்பிரணியசிவாவும் (18)

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா். மூவரின் உடல்களும் கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து தகவலறிந்த நிலக்கோட்டை தொகுதி பேரவை உறுப்பினா் ஆா்.அய்யனாா் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை சென்றுந கருப்பையா, சுப்பிரமணியசிவா ஆகியோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.