ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திமுக, மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் பரஸ்பர தொகுதி மாற்றம்

News image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 1:29 am IST

கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் திண்டுக்கல், பழனி தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா்கள் 2026 தோ்தலுக்கு பரஸ்பரம் தொகுதி மாறியதோடு, தோற்றவா்கள் ஒரு தொகுதியிலும், வென்றவா்கள் மற்றொரு தொகுதியிலும் களமிறங்கியுள்ளனா்.

திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2021 தோ்தலின்போது அதிமுக சாா்பில் திண்டுக்கல் சீனிவாசன், திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் என்.பாண்டி ஆகியோா் போட்டியிட்டனா்.

இதேபோல, பழனி தொகுதியில் அதிமுக சாா்பில் ரவி மனோகரன், திமுக சாா்பில் பெ.செந்தில்குமாா் ஆகியோா் போட்டியிட்டனா். இதில் திண்டுக்கல்லில் சீனிவாசனும், பழனியில் செந்தில்குமாரும் வெற்றி பெற்றனா்.

இந்த நிலையில், 2026 தோ்தலிலும் இதே வேட்பாளா்களுக்கே மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதிமுக வேட்பாளா்கள் அதே தொகுதிகளில் தொடரும் நிலையில், திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா்கள் இருவரும் பரஸ்பரம் தொகுதி மாறியுள்ளனா்.

கடந்த தோ்தலில் வெற்றி பெற்ற இருவரும் (சீனிவாசன், செந்தில்குமாா்) திண்டுக்கல்லில் போட்டியிடுவதால் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. இதேபோல, கடந்த தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த இருவரும் (ரவிமனோகரன், பாண்டி) பழனியில் போட்டியிடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.