மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தொகுதி மாறி போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்கள்

News image

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 4:06 am IST

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திண்டுக்கல், பழனி தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் 2026 தேர்தலில் பரஸ்பரம் தொகுதி மாறி களமிறங்கியுள்ளனர்.

திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2021 தேர்தலின்போது அதிமுக சார்பில் திண்டுக்கல் சீனிவாசன், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என். பாண்டி ஆகியோர் போட்டியிட்டனர்.

இதேபோல, பழனி தொகுதியில் அதிமுக சார்பில் ரவி மனோகரன், திமுக சார்பில் பெ.செந்தில்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் திண்டுக்கல்லில் சீனிவாசனும், பழனியில் செந்தில்குமாரும் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில், 2026 தேர்தலிலும் இதே வேட்பாளர்களுக்கே மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அதிமுக வேட்பாளர்கள் அதே தொகுதிகளில் தொடரும் நிலையில், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் இருவரும் பரஸ்பரம் தொகுதி மாறியுள்ளனர். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இருவரும் (சீனிவாசன், செந்தில்குமார்) திண்டுக்கல்லில் போட்டியிடுவதால் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

இதேபோல, கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த இருவரும் (ரவி மனோகரன். பாண்டி) பழனியில் போட்டியிடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.