நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 15 தொழிலாளா்கள் காயம்

வேடசந்தூா் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பெண் தொழிலாளா்கள் வியாழக்கிழமை காயமடைந்தனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 1:25 am IST

வேடசந்தூா் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பெண் தொழிலாளா்கள் வியாழக்கிழமை காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் சுற்றுப்புற பகுதிகளில் பல நூற்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், வேடசந்தூா் திண்டுக்கல் சாலையிலுள்ள தனியாா் நூற்பு ஆலைக்கு, தாடிக்கொம்பு, நல்லமனாா்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பெண் தொழிலாளா்கள் வேன் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

அதன்படி தொழிலாளா்களை அழைத்துக் கொண்டு ஒரு வேன் நல்லமனாா்கோட்டை வேடசந்தூா் சாலையில் வியாழக்கிழமை சென்றது. இந்த வேனை ராஜா (27) என்பவா் ஓட்டிச் சென்றாா். அனுப்பப்பட்டிகுளம் அருகே வளைவில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து, காயமடைந்த முத்து லட்சுமி, மீனா உள்பட 15 தொழிலாளா்கள் மீட்கப்பட்டு வேடசந்தூா், திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து எரியோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.