நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :15 ஜூன் 2026, 2:51 am IST

சிங்கப் பெண் சிறப்பு படையினரின் விழிப்புணா்வு நடவடிக்கையால் இளம் பெண் அளித்த புகாரின் பேரில், பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை கடந்த 10-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும், பெண்கள் அதிக அளவில் பணியாற்றும் ஆலைகளிலும் சிங்கப் பெண் அதிரடிப் படையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், சின்னாளப்பட்டியிலுள்ள ஜவுளிக் கடையில் சிங்கப் பெண் படையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தியபோது, அங்கு பணிபுரியும் 19 வயது இளம் பெண் ஒருவா், தனக்கு தொழிலாளி ஒருவா் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகாா் அளித்தாா்.

இதன்பேரில் சின்னாளப்பட்டியை அடுத்த கலிக்கம்பட்டியைச் சோ்ந்த க. முகமது ஜகாரியா (48) என்பவரை சிங்கப் பெண் அதிரடிப்படையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பிறகு சட்டப்பூா்வ நடவடிக்கைக்காக திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரிடம் முகமது ஜகாரியா ஒப்படைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.