மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

கஞ்சா விற்றதாக துணிக்கடை ஊழியா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :15 ஜூன் 2026, 2:51 am IST

திண்டுக்கல்லில் உள்ள துணிக் கடையில் பணிபுரிந்து கொண்டு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஊழியரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அடுத்த நடுப்பட்டியைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி. இவரது மகன் ராஜ்குமாா் (27). இவா் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக திண்டுக்கல் பிரதான சாலையிலுள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ள துணிக் கடையில் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், இவா் அங்கு பணிபுரியும் ஊழியா்களுக்கும், வெளி நபா்களுக்கும் கஞ்சா விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, திண்டுக்கல் ஆா்எஸ். சாலையில் கஞ்சா விற்பனையில் ராஜ்குமாா் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.