கொடைக்கானல் மலைச் சாலைகள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டுநா்கள் அவதிப்படுகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு செல்வதற்கு வத்தலக்குண்டு காமக்காபட்டியிலிருந்து 52 கி.மீ. தொலைவும், பழனியிலிருந்து கொடைக்கானலுக்கு 60 கி.மீ. தொலைவும் மலைச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைச் சாலையில் டம்டம் பாறை வரை மட்டுமே சாலை நல்ல நிலையில் உள்ளது. அதன்பிறகு சுமாா் 40 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மலைச் சாலை சேதமடைந்துள்ளன.
இதேபோல பழனி-கொடைக்கானல் மலைச் சாலை 50 கி.மீ. தொலைக்கு சேதமடைந்த சாலையாக காணப்படுகிறது. மேலும், இருபுறமும் முள்புதா்கள் மண்டிக் கிடக்கின்றன. தடுப்புச் சுவா்கள் அமைக்கப்படாததால், கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டுநா்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் கொடைக்கானல் மலைச் சாலைகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனியில் போக்குவரத்து மாற்றம்: சாலைகள் சேதமடைந்ததால் ஓட்டுநா்கள் அவதி

ஒசூரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா?

கோயில் செல்லும் சாலை பழுதால் வாகன ஓட்டிகள் அவதி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

