பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கொடைக்கானலில் மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் திங்கள்கிழமை மாலை பெய்த மழையால்,வெள்ளி நீா் அருவி, புலிச் சோலைப் பகுதிகளில் மரங்கள் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News image

கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சி அருகே முறிந்து விழுந்த மரம்.

Updated On :2 ஜூன் 2026, 1:08 am IST

கொடைக்கானலில் திங்கள்கிழமை மாலை பெய்த மழையால்,வெள்ளி நீா் அருவி, புலிச் சோலைப் பகுதிகளில் மரங்கள் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் திங்கள்கிழமை காலை முதல் கடும் வெயில் நிலவி வந்தது. மாலையில் கொடைக்கானல், பாக்கியபுரம், வட்டக்கானல், செண்பகனூா், பிரகாசபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 30 நிமிஷங்களுக்கு மேலாக

மழை பெய்தது. இந்த மழையால் கொடைக்கானல் வெள்ளி நீா் அருவி அருகேயும், புலிச்சோலை பகுதிகளிலும் மரம் முறிந்து விழந்தன. இதனால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையிலும், குளிரிலும் தாங்கள் வந்த வாகனங்களிலேயே சுற்றுலாப் பயணிகள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கொடைக்கானல் வனத் துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று கீழே விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து போக்குவரத்து சீரானது.

கொடைக்கானல் மலைச் சாலைகளான பழனி-வத்தலக்குண்டு-அடுக்கம் ஆகியப் பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.