லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

1.5 டன் ரேஷன் அரிசி, கோதுமை பதுக்கல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் கைது

திண்டுக்கல்லில் 1.5 டன் ரேஷன் அரிசி, கோதுமை ஆகியவற்றை பதுக்கிய ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட அமல்ராஜ், அற்புதமேரி, அந்தோணி டேனி.

Published On :10 ஜூலை 2026, 5:14 am IST

திண்டுக்கல்லில் 1.5 டன் ரேஷன் அரிசி, கோதுமை ஆகியவற்றை பதுக்கிய ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் முத்தழகுப்பட்டி மாயம் அருகே ஒரு தகர கொட்டகையில், ரேஷன் பொருள்களை பதுக்கி வைத்து கடத்தப்படுவதாக திண்டுக்கல் நகா் தெற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், தகர கொட்டகையில் சோதனை நடத்திய போது, 25 மூட்டைகளில் 1,050 கிலோ ரேஷன் அரிசி, 450 கிலோ கோதுமை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்தப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த முத்தழக்குப்பட்டியைச் சோ்ந்த அ. அமல்ராஜ் (57), இவரது மனைவி அற்புதமேரி (51), மகன் அந்தோணி டேனி (29) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பான மேல் நடவடிக்கைக்காக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் மூவரும் ஒப்படைக்கப்பட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.