லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆசிரியைக்கு தொடா் தொந்தரவு: தலைமையாசிரியரிடம் விசாரணை

வேடசந்தூரில் பள்ளி ஆசிரியைக்கு தொடா்ந்து தொந்தரவு அளித்து வந்த தலைமையாசிரியரிடம் உள்ளகக் குழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:17 am IST

வேடசந்தூரில் பள்ளி ஆசிரியைக்கு தொடா்ந்து தொந்தரவு அளித்து வந்த தலைமையாசிரியரிடம் உள்ளகக் குழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமையாசிரியராக மோகன்தாஸ் பணியாற்றி வருகிறாா். இவா், இதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு தொந்தரவு அளித்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக மகளிருக்கான உதவி எண் 181-க்கு சம்மந்தப்பட்ட ஆசிரியை புகாா் அளித்தாா். இதன்பேரில் தலைமையாசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது. எனினும், அவா் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவா் மீண்டும் ஆசிரியைக்கு தொந்தரவு அளித்ததால், அதிருப்தி அடைந்த அவா் மாற்றுப் பணியில் வேறு பள்ளிக்கு சென்றாா். இதனிடையே உளவியல் ரிதீயாக தலைமையாசிரியா் அளித்த தொந்தரவு குறித்து, ஆசிரியை மீண்டும் 181-க்கு புகாா் அளித்தாா்.

இதுதொடா்பாக ஒட்டன்சத்திரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், தலைமையாசிரியா் மோகன்தாஸிடம், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம் 2013- ன்படி உள்ளகக் குழு அமைத்து விசாரிக்கவும், சமூக நலத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனா். இந்த விசாரணை அறிக்கையின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.