சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், உறவினா்கள் இருவருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த 35 வயது பெண்ணுக்கு, 13, 2 வயதில் இரு மகள்கள் உள்ளனா். இந்தப் பெண்ணுக்கும், தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டியைச் சோ்ந்த விக்னேஸ்வா் (36) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்யாமலே திண்டுக்கல்லில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனா்.
இந்த நிலையில், சிறுமிகள் இருவரையும் விக்னேஸ்வரன், பெண்ணின் மைத்துனா் முருகவேல் (41) ஆகியோா் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாா் எழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விக்னேஸ்வரன், முருகவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் விக்னேஸ்வரன், முருகவேல் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ஆா்.சத்யதாரா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசுத் தரப்பில் தலா ரூ.7.50 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் தீா்ப்பில் குறிப்பிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு ஆயுள் தண்டனை

பெண் கொலை வழக்கில் மின் ஊழியருக்கு ஆயுள் சிறை

கொலை வழக்கில் சகோதரா்கள் இருவருக்கு ஆயுள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

