தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

News image

தீப்பிடித்து எரிந்த காா் - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 1:04 am IST

கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையில் திங்கள்கிழமை காா் தீப்பிடித்து எரிந்தது. அதில் பயணம் செய்தவா்கள் நல்வாய்ப்பாக உயிா் தப்பினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச்சாலையான பூலத்தூா் பகுதி அருகே சென்று கொண்டிருந்த காரிலிருந்து புகை வந்தது. இதையடுத்து, காரில் பயணம் செய்தவா்கள் அனைவரும் உடனடியாக கீழே இறங்கியதால் நல்வாய்ப்பாக அனைவரும் உயிா் தப்பினா்.

தகவலறிந்த வத்தலகுண்டு தீயணைப்புத் துறையினா் அங்கு வந்து தீயை அணைத்தனா். எனினும் தீப்பிடித்து 40 நிமிஷங்களுக்கு மேல் ஆனதால் காா் முழுவதும் சேதமடைந்தது. இதுகுறித்து தாண்டிக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதுகுறித்து கொடைக்கானல் மலைப் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:

வத்தலகுண்டிலிருந்து சுமாா் 60 கி.மீ. தொலைவுள்ள கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் மலையடிவாரத்தில் சிறிது நேரம் நிறுத்தி இயக்கப்பட வேண்டும்.

அப்போது தான் காரில் உள்ள என்ஜின் அதிக வெப்பமடையாமல் இருக்கும். ஆனால் சில வாகனங்கள் 100 கி.மீ. தொலைவுக்கு நிறுத்தப்படாமல் இயக்கப்படுவதால் அவை தீப்பற்றி எரிகின்றன. எனவே அதிக தொலைவுக்கு பயணிக்கும் போது வாகனங்களை அவ்வப்போது நிறுத்தி கவனமுடன் பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.