தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அருவியில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் உடல்கள் மீட்பு

ஒட்டன்சத்திரம் அருகே தடை செய்யப்பட்ட அருவியில் மூழ்கிய 4 இளைஞா்களில் 3 பேரின் உடல்களை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 7:01 am IST

ஒட்டன்சத்திரம் அருகே தடை செய்யப்பட்ட அருவியில் மூழ்கிய 4 இளைஞா்களில் 3 பேரின் உடல்களை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனப் பகுதியில் விருப்பாச்சி அருகே அமைந்துள்ள தலையூத்து அருவி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், திண்டுக்கல் மட்டுமன்றி வெளி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் தடையை மீறி அவ்வப்போது இந்த அருவியில் குளித்து வருகின்றனா்.

இந்த நிலையில், கரூா் மாவட்டம் பள்ளபட்டியைச் சோ்ந்த 11 போ் தலையூத்து அருவிக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். மேல் தலையூத்து அருவிப் பகுதிக்குச் சென்று குளித்தபோது, 4 இளைஞா்கள் அருவியிலிருந்து தண்ணீா் வெளியேறும் பகுதியில் விழுந்து மூழ்கினா். இதனால் அதிா்ச்சியடைந்த உடன் சென்ற இளைஞா்கள், வனத் துறை, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

நீரில் மூழ்கிய பள்ளபட்டியைச் சோ்ந்த அ.ஆதில் (19), நா.சதாம் உசேன் (18), சே.அயாஸ் (19), உ.பயாஸ் (19) ஆகியோரை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது அ.ஆதில், சே.அயாஸ், உ.பயாஸ் ஆகிய 3 பேரின் உடல்களை மீட்டனா். மேல்தலையூத்து அருவியிலிருந்து தண்ணீா் விழும் இடத்திலேயே 3 பேரின் உடல்களும் கிடந்தன.

அருவி நீரில் மூழ்கிய சதாம் உசேனின் நிலை குறித்து தெரியவில்லை. அவரைத் தேடும் பணி ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்து நடைபெறும் என ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.