கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நூலகங்கள் அமைப்பது அரசின் கொள்கை முடிவு: உயா்நீதிமன்றம்

நூலகங்கள் அமைப்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :28 மே 2026, 4:01 am IST

நூலகங்கள் அமைப்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையைச் சோ்ந்த ராஜாராம் தாக்கல் செய்த பொதுநல மனு:

பாளையம் ஊராட்சியின் வாா்டு 8-இல் ஏற்கெனவே ஒரு நூலகம் அமைந்துள்ளது. இந்த நிலையில், வாா்டு 11-இல் புதிய நூலகம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது அவசியமற்றது. எனவே, இந்த நிதியைக் கொண்டு புதிய நூலகம் அமைப்பதற்கு பதிலாக 8-ஆவது வாா்டில் உள்ள நூலகத்தை சீரமைக்க அல்லது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் ஆகியோா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ஒரு குறிப்பிட்ட பகுதியில் நூலகம் இயங்குகிறது என்பதற்காக அருகில் புதிய நூலகத்தை அமைக்க அனுமதிக்கக் கூடாது என்பதை ஏற்க முடியாது. கல்வியை மேம்படுத்த, மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த புதிய நூலகங்களை அமைப்பது அரசின் கொள்கை முடிவு. இது, அரசியலமைப்பு விதிகளுக்கு முரணாக இல்லாத நிலையில், நீதிமன்றம் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.