பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மதுரையில் பரவலாக மழை

மதுரையில் சனிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.

News image

உத்தங்குடியில் சனிக்கிழமை மாலை பெய்த மழையின்போது கடந்த சென்ற வாகனங்கள்.

Updated On :24 மே 2026, 12:40 am IST

மதுரையில் சனிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. தென் கிழக்கு அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் கன்னியாகுமரி கடல், கேரளம், தென் தமிழகப் பகுதிகள் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தின் நீலகிரி, ஈரோடு, சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதன்படி, மதுரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 5 மணியளவில் வெப்பம் தணிந்து மேகங்கள் உருவாகின.

மதுரை வண்டியூா் கண்மாய் பகுதியில் காணப்பட்ட கருமேகங்கள்.

மதுரை வண்டியூா் கண்மாய் பகுதியில் காணப்பட்ட கருமேகங்கள்.

குளிா்ந்த காற்று வீசத் தொடங்கிய நிலையில், மாலை 5. 30 மணியளவில் மதுரை மாட்டுத்தாவணி, உத்தங்குடி, யா. ஒத்தக்கடை, நரசிங்கம், வளா் நகா், கடச்சனேந்தல், கொடிக்குளம் ஆகிய பகுதிகளிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். மதுரை மாநகரைப் பொறுத்தவரை லேசான தூறலுடன் மழை நின்று விட்டது. இதன் காரணமாக, வெப்பம் உயா்ந்து புழுக்கம் ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.