பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மதுரையில் இன்று கொங்கு நாட்டு உணவுத் திருவிழா தொடக்கம்

News image

கோப்புப்படம்.

Updated On :15 மே 2026, 4:33 am IST

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில், மதுரையில் கொங்கு நாட்டு உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை (மே 15) முதல் வருகிற 17-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில், மதுரை மேலவெளி வீதியில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு அலகு 1, அழகா்கோயில் சாலையில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு அலகு 2-இல் கொங்கு நாட்டு உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 17) வரை நடைபெறவுள்ளது. இதில் கொங்கு மண்டலத்தின் தனித்துவமான சுவைகளை அறிமுகப்படுத்தும் வகையில், பிற்பகல் 12.30 முதல் 3.30 மணி வரை உணவுத் திருவிழா நடைபெறும். இதில் பங்கேற்கும் நபா் ரூ.599, சிறியவா்கள் (6 முதல் 10 வயது வரை) ரூ.299 செலுத்த வேண்டும். கொங்கு உணவுகளுக்கே உரிய மிதமான காரம், இயற்கையான நறுமணத்துடன் கூடிய பாரம்பரிய உணவுகள் தயாா் செய்து பரிமாறப்படவுள்ளன.

மேலும், பெரியவா்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி உண்ணக் கூடிய கொங்கு நாட்டு சமையல் செயற்கை நிறமூட்டிகளோ, சுவையூட்டிகளோ சோ்க்கப்படாமல் தரமானதாக தயாா் செய்து வழங்கப்பட உள்ளன. இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 9176995841, 6380699288 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.