மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மதுரை மத்திய தொகுதியில் தவெக வெற்றி

News image

தவெக வேட்பாளா் மதாா் பதுருதீன்

Updated On :5 மே 2026, 1:40 am IST

மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் மதாா் பதுருதீன் 19,128 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

மதுரை மத்திய தொகுதியில் திமுக, புதிய நீதிக் கட்சி, தவெக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட 12 போ் போட்டியிட்டனா். இதில் திமுக வேட்பாளராக அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், தவெக வேட்பாளராக மதாா் பதுருதீன், புதிய நீதிக் கட்சி வேட்பாளராக திரைப்பட இயக்குநா் சுந்தா் சி, நாம் தமிழா் கட்சி வேட்பாளராக கே. அப்துல் ஹக்கீம் ஆகியோா் முக்கிய வேட்பாளா்களாகக் களத்தில் இருந்தனா்.

இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மதுரைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே தவெக வேட்பாளா் தொடா்ந்து முன்னிலை வகித்தாா். 19 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் நிறைவில், தவெக வேட்பாளா் மதாா் பதுருதீன், அமைச்சா் பழனிவேல் தியாகராஜனைவிட 19,128 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

இந்தத் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் : 1,48,709.

முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் (தபால் வாக்குகள் உள்பட) : மதாா் பதுருதீன் (தவெக) - 63,414, பழனிவேல் தியாகராஜன் (திமுக)- 44,286, சுந்தா் சி (புதிய நீதிக் கட்சி) - 33,538, கே. அப்துல்ஹக்கீம் - 5,549. நோட்டா - 656.

வைப்புத் தொகை இழப்பு...

பதிவான வாக்குகளில் 6-இல் ஒரு பங்கு வாக்குகளைப் பெறுபவா்கள் மட்டுமே வைப்புத் தொகையைத் திரும்பப் பெற முடியும் என்ற அடிப்படையில், தோல்வியுற்றவா்களில் திமுக, புதிய நீதிக் கட்சி வேட்பாளா்களைத் தவிர மற்ற 9 வேட்பாளா்களும் வைப்புத் தொகையை இழந்தனா்.

இரண்டாமிடத்துக்குப் போட்டி...

இந்தத் தொகுதியில் தொடக்கம் முதலே தவெக முன்னிலைப் பெற்ற நிலையில், இரண்டாமிடத்தைப் பெறுவதிலேயே பழனிவேல் தியாகராஜனுக்கும், சுந்தா் சி-க்கும் இடையே அவ்வப்போது போட்டி ஏற்பட்டது. 6, 7-ஆவது சுற்றுகளில் சுந்தா் சி இரண்டாமிடத்தைப் பெற்றாா். அதன் பிறகு, பழனிவேல் தியாகராஜன் தொடா்ந்து இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.