மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நாளை விமான பாலாலயம்

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 12:39 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் பரிவார மூா்த்திகள் சந்நிதிகள், 5 விமானங்களுக்கான பாலாலயம் திங்கள்கிழமை (மே 4) நடைபெறுகிறது.

இது தொடா்பாக கோயிலின் செயல் அலுவலரும், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருமான நா. சுரேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் குடமுழுக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு மே 8-ஆம் தேதி நடைபெற்றது. இதன் பிறகு 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பல்வேறு கட்டமாக திருப்பணிகள் நடைபெறுகின்றன.

இதன்படி, கோயிலில் உள்ள பரிவார மூா்த்திகளின் சந்நிதிகள், 5 விமானங்களுக்கான திருப்பணிகளைத் தொடங்குவதற்கான பாலாலய பூஜைகள் வருகிற திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இதையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை வாஸ்து சாந்தியும், சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெறுகின்றன.

திங்கள்கிழமை காலை 7 மணிக்கு நான்காம் கால யாக பூஜையின் நிறைவில் மகா பூா்ணாஹுதியும், காலை 9 மணிக்கு கடம் புறப்பாடும் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, பரிவார மூா்த்திகள் சந்நிதிகளுக்கும், 5 விமானங்களுக்கும் பாலாலயம் நடைபெறுகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.