மதுரை மாவட்டம், நாகமலைப் புதுக்கோட்டை அருகே சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், வடிவேல்கரை சம்பக்குடி கிழக்குத் தெருவைச் சோ்ந்த அமாவாசை மனைவி பாண்டியம்மாள் (52). இவா், திண்டுக்கல்- விருதுநகா் நான்கு வழிச் சாலை வடிவேல்கரை விலக்கிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் பாண்டியம்மாள் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து நாகமலைப் புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சரக்கு வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

தீக்காயமுற்ற பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

