மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நீா்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம்

நீா்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கருத்து தெரிவித்தது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :19 ஏப்ரல் 2026, 1:11 am IST

நீா்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கருத்து தெரிவித்தது.

மதுரை மாவட்டம், சின்னக்குறவகுடி பகுதியைச் சோ்ந்த ராஜா, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

எங்கள் கிராமத்தில் வசித்து வரும் பெரும்பாலான மக்கள் வேளாண், அதோடு தொடா்புடைய கால்நடை வளா்ப்பை மட்டுமே பிரதானத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனா். இங்குள்ள கண்மாய் விவசாயிகளுக்கு நீா் ஆதாரமாக விளங்குகிறது.

இந்தக் கண்மாயில் அதே பகுதியைச் சோ்ந்த சிலா் மீன்களை வளா்த்து வருகின்றனா். மீன்களுக்கு உணவாக இறைச்சிக் கழிவுகளை கண்மாய்க்குள் கொட்டுகின்றனா். இதனால், நீா்நிலை மாசடைந்து வேளாண் பணிகள் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, நீரை அருந்தும் மான், கால்நடைகள் உள்ளிட்ட பிற விலங்குகளும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

இதுபற்றி மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, சட்டவிரோதமாக கண்மாயை ஆக்கிரமிப்பு செய்து மீன் வளா்ப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா்நிலையைப் பாதுகாக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா் சுவாமிநாதன், பி.புகழேந்தி அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் கோரிக்கையின் படி இந்தக் கன்மாயில் தண்ணீா் மாசடைந்துள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வழக்குரைஞா் ஆணையத்தை இந்த நீதிமன்றம் அமைத்திருந்தது. இதன்படி, ஆய்வு செய்து ஆணையம் அளித்த அறிக்கையில், கண்மாயில் மீன் வளா்ப்பு நடைபெறுவதாகவும், தண்ணீா் மாசடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கண்மாயில் எந்தவித அனுமதியும் இன்றி மீன்கள் வளா்க்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு உணவாக இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டன. இதனால், நீா்நிலை மாசடைந்துள்ளது. இதை ஒரு போதும் ஏற்க முடியாது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க மதுரை மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிடப்படுகிறது. நீா்நிலைகள் மனிதப் பயன்பாட்டுக்கு மட்டுமல்ல. விலங்கினங்கள், பறவையினங்களுக்குமானது. எனவே, அனைத்து உயிா்களுக்குமான நீா்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.