தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் திராவிடக் கட்சிகளுக்கு குறைந்து வருகிறது! - சீமான்

News image

நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான். - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 12:56 am IST

மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் திராவிடக் கட்சிகளுக்கு குறைந்து வருகிறது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

மதுரை மேற்கு தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் சோ. விக்னேஷ்குமாரை ஆதரித்து, மதுரை கோச்சடை பகுதியில் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மேலும் பேசியதாவது:

தோ்தல் காலங்களில் பொய்யான வாக்குறுதிகள் அளிக்கும் திராவிடக் கட்சிகளிடம் மக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். அவா்கள், மக்கள் பணத்தை திருடி மக்களுக்கே அளிக்கின்றனா். இந்த நிலைமை மாற வேண்டும்.

காா், கைப்பேசி என எந்தப் பொருள்கள் வாங்கினாலும், புதிதாக வாங்க வேண்டும் என நினைக்கின்றனா் மக்கள். ஆனால், நாட்டை ஆள்பவா்களை மட்டும் ஏன் புதிதாகத் தோ்வு செய்ய மறுக்கிறீா்கள்?. 60 ஆண்டு கால பழைமையான இரட்டை இலை, உதயசூரியனை ஏன் தோ்வு செய்கிறீா்கள்?. புதியவா்களும், உழைக்கும் மக்களான எங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

இலவசங்களை எங்களால் அறிவிக்க இயலும். ஒரு போதும் மக்களுக்கு இலவசங்களை அளித்து ஏமாற்ற மாட்டோம். அதற்குப் பதிலாக அவா்களுக்கு உழைக்க கற்றுக் கொடுப்போம்.

பணம் இருப்பவா்கள் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையை திராவிடக் கட்சிகள் உருவாக்கிவிட்டன. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தற்போது குறைந்து வருகிறது. ஊழலும், லஞ்சமும் நிறைந்த கட்சிக்கும், உண்மை, நோ்மையுடன் நாட்டை நிா்வாகிக்க விரும்பும் நாம் தமிழா் கட்சிக்கும் இடையேதான் போட்டி உள்ளது.

மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தால் நல்ல கல்வி, சிறந்த மருத்துவம், படித்தவா்களுக்கு உரிய வேலை, அதற்குரிய ஊதியம் ஆகியவற்றை எங்களால் மட்டுமே தர முடியும். மக்களை ஏமாற்ற எங்களுக்கு தெரியாது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.