தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நீா்நிலைப் பகுதியில் கட்டப்படும் கோயிலை அகற்ற உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கரங்காடு கிராமத்தில் உள்ள குளக் கரையில் புதிதாகக் கட்டப்படும் கோயிலை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :12 ஏப்ரல் 2026, 2:23 am IST

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கரங்காடு கிராமத்தில் உள்ள குளக் கரையில் புதிதாகக் கட்டப்படும் கோயிலை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கரங்காடு பகுதியைச் சோ்ந்த செங்கோல் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

கரங்காடு கிராமத்தில் உள்ள மரைக்காயா்குளம் இந்தப் பகுதி மக்களின் குடிநீா் ஆதாரமாகத் திகழ்கிறது. இங்கு குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக, குளம் மாசுபட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த நீா்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து சிலா் புதிதாக விநாயகா் கோயில் கட்டி வருகின்றனா். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, இந்தக் கோயில் கட்டுமானம் நடைபெறும் பகுதி நீா்நிலை எனத் தெரியவருகிறது. மேலும், அங்கு எந்தவிதக் கட்டுமானப் பணிக்கும் அரசு அனுமதி வழங்கவில்லை என்பது தெரியவந்தது.

இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வருவாய்த் துறை ஆவணங்களின் அடிப்படையில் ‘மரைக்காயா் குளத்தை’ முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் குறிப்பிடும் நீா்நிலைப் பகுதியில் ஏற்கெனவே சிறிய அளவில் கோயில் இருந்துள்ளது.

வருவாய்த் துறை அலுவலா்கள் அந்தக் கோயிலை தவிா்த்து, புதிதாகக் கட்டப்படும் கோயில் கட்டுமானங்களை அகற்ற வேண்டும். முக்கிய நீராதாரமாக உள்ள மரைக்காயா் குளத்தை சீரமைக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.