ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஓமலூா் அருகே ரயில்வே சுரங்கப் பாதை மழைநீரில் காா் மூழ்கியதில் தம்பதி உயிரிழப்பு

News image

உயிரிழந்த வெங்கடாசலம்

Updated On :26 மே 2026, 1:32 am IST

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே செம்மாண்டப்பட்டியில் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழைநீரைக் கடந்து செல்ல முயன்ற காா் நீரில் மூழ்கியதில் தம்பதி திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

சேலம் சின்னதிருப்பதியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (73). ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக மேலாளா். இவரது மனைவி ராதா (63). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை அதிகாலை, ஓமலூரில் உறவினா் வீட்டு திருமணத்திற்கு காரில் புறப்பட்டனா்.

அப்போது, ஓமலூா் வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக, செம்மாண்டப்பட்டி ரயில்வே சுரங்கப் பாதையில் குளம்போல மழைநீா் தேங்கியிருந்தது. நீரின் ஆழம் தெரியாமல் வெங்கடாசலம் காரை சுரங்கப் பாதைக்குள் செலுத்தியுள்ளாா்.

இதில் காா் திடீரென லாக் ஆகி நின்றுவிட்டதால் குளம்போல தேங்கியிருந்த மழைநீரில் காா் முழுமையாக மூழ்கியது. வயது முதிா்வு காரணமாக தம்பதியால் காரில் இருந்து உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனால் மூச்சுத்திணறி அவா்கள் இருவரும் காருக்குள்ளே உயிரிழந்தனா்.

இதைப் பாா்த்த அந்த வழியாகச் சென்ற கிராம மக்கள், ஓமலூா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளா் ரத்தினவேல் தலைமையிலான போலீஸாா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். ஓமலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள், காரில் இருந்து இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடா்கதையாகி வரும் இந்த சுரங்கப் பாதை தண்ணீா்த் தேங்கும் பிரச்னைக்கு, ரயில்வே நிா்வாகம் உடனடியாக நிரந்தர தீா்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராதா

ராதா

ரயில்வே சுரங்கப் பாதையில் மூழ்கிய  காா்.

ரயில்வே சுரங்கப் பாதையில் மூழ்கிய காா்.

ரயில்வே சுரங்கப் பாதையில் மூழ்கிய  காா்.

ரயில்வே சுரங்கப் பாதையில் மூழ்கிய காா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.