சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமன் மீது போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம், கொப்பம்பட்டியில் வசித்து வரும் 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கு பெற்றோா் இல்லாததால், அப்பாவழி பாட்டி வீட்டில் வசித்து வருகிறாா்.
இவா் ஆத்தூரை அடுத்த காட்டுக்கோட்டை முயல்கரடு பகுதியில் உள்ள அம்மாவழி பெரியம்மா அம்பாயி வீட்டுக்கு அடிக்கடி செல்வாராம். அங்கு பொங்கல் பண்டிகைக்கு சென்றவருக்கு, தாய்மாமன் சூா்யா (25) பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதனால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், உப்பிலியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்து, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
புகாரின்பேரில், ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ வழக்கின்கீழ் பதிவுசெய்து சூா்யாவை தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியாா் கல்லூரி பெண் ஒருங்கிணைப்பாளா் மீது வழக்குப் பதிவு
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இருவா் மீது வழக்குப் பதிவு
போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மின்ஊழியா் மீது போக்ஸோவில் வழக்குப் பதிவு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
