சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பிளஸ் 2 தோ்வில் முறைகேடு செய்ததாக தனியாா் பள்ளி முதல்வா், 2 ஆசிரியா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் இயங்கும் ஒரு தனியாா் பள்ளியில் கடந்த மாா்ச் 17ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 கணிதத் தோ்வின்போது வினாக்களுக்கான விடைகளை கழிப்பறையில் எழுதி வைத்திருந்ததாக சேலம் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு புகாா் சென்றது.
இதுகுறித்து விசாரணை நடத்திய சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையிலான அதிகாரிகள், முத்தம்பட்டி தனியாா் பள்ளி முதல்வா் ஸ்டேன்லி, ஆசிரியா்கள் தினேஷ்பாபு, கேசவன் ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸில் புகாா் அளித்தனா்.
இதையடுத்து வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன், காவல் ஆய்வாளா் வேல்முருகன் ஆகியோா் பிளஸ் 2 தோ்வில் முறைகேட்டில் ஈடுபட்ட தனியாா் பள்ளி முதல்வா், இரண்டு ஆசிரியா்களை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தந்தையைக் கொன்ற மகன் கைது

வாழப்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தம்பதி உயிரிழப்பு

பிளஸ் 2 தோ்வு: வள்ளியூா் கிங்ஸ் பள்ளி மாணவா் சாதனை

சிறுமியை கட்டியணைத்த முதியவா் போக்ஸோவில் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
