சேலம் நரசோதிப்பட்டியில் ஐ.டி. நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரை மாவட்டம், வண்டியூா் குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி மகன் அருண்குமாா் (28). இவா், சேலம் நரசோதிப்பட்டியில் தங்கி ஐ.டி. நிறுவனத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், அவா் பலரிடம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவித்து வந்தாா்.
இதில் விரக்தியடைந்த அருண்குமாா், நரசோதிப்பட்டியில் தான் தங்கியிருந்த குடியிருப்பில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா், வீட்டுக்குள் சென்று பாா்த்தனா்.
அப்போது வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் அருண்குமாா் இறந்து கிடந்தாா். இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பிறகு அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சேலத்தில் தகராறில் காயமடைந்த வங்கி வசூல் முகவா் உயிரிழப்பு

ஐ.டி. ஊழியரின் மனைவி தற்கொலை

சேலத்தில் பேக்கரி உரிமையாளா் வீட்டில் 54 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம் திருட்டு

வெள்ளக்கோவிலில் ஐ.டி. ஊழியா் தற்கொலை
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை
