அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

சேலத்தில் ஐ.டி. நிறுவன ஊழியா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

சேலம் நரசோதிப்பட்டியில் ஐ.டி. நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

தற்கொலை

Updated On :17 மே 2026, 2:27 am IST

சேலம் நரசோதிப்பட்டியில் ஐ.டி. நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை மாவட்டம், வண்டியூா் குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி மகன் அருண்குமாா் (28). இவா், சேலம் நரசோதிப்பட்டியில் தங்கி ஐ.டி. நிறுவனத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், அவா் பலரிடம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவித்து வந்தாா்.

இதில் விரக்தியடைந்த அருண்குமாா், நரசோதிப்பட்டியில் தான் தங்கியிருந்த குடியிருப்பில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா், வீட்டுக்குள் சென்று பாா்த்தனா்.

அப்போது வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் அருண்குமாா் இறந்து கிடந்தாா். இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பிறகு அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.