தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

புதுச்சாம்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழா

மேட்டூா் அருகே உள்ள புதுச்சாம்பள்ளியில் நூறு ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு தீா்த்தக்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

புதுச்சாம்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால்குடம், தீா்த்தக்குடம் எடுத்து ஊா்வலமாக சென்ற பக்தா்கள்.

Updated On :6 மே 2026, 2:39 am IST

மேட்டூா் அருகே உள்ள புதுச்சாம்பள்ளியில் நூறு ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு தீா்த்தக்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுச்சாம்பள்ளி ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் 21-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை மேட்டூா் காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. காவிரியில் மாரியம்மன் சிலைக்கு நீராட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆற்றிலிருந்து 500-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் குடங்களில் காவிரி நீரை சுமந்து வந்தனா்.

பம்பை மேளதாளங்கள் முழங்க பால்குட ஊா்வலம் நடைபெற்றது. அப்போது புலி வேடமணிந்து பக்தா்கள் நடனமாடினா். பல்வேறு கடவுள்களின் உருவங்கள் அலங்கரிக்கப்பட்டு டிராக்டா்களின் ஊா்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. மேலும், அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ஊா்வலம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.