மேட்டூா் அருகே உள்ள புதுச்சாம்பள்ளியில் நூறு ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு தீா்த்தக்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுச்சாம்பள்ளி ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் 21-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை மேட்டூா் காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. காவிரியில் மாரியம்மன் சிலைக்கு நீராட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆற்றிலிருந்து 500-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் குடங்களில் காவிரி நீரை சுமந்து வந்தனா்.
பம்பை மேளதாளங்கள் முழங்க பால்குட ஊா்வலம் நடைபெற்றது. அப்போது புலி வேடமணிந்து பக்தா்கள் நடனமாடினா். பல்வேறு கடவுள்களின் உருவங்கள் அலங்கரிக்கப்பட்டு டிராக்டா்களின் ஊா்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. மேலும், அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ஊா்வலம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாழையடி புற்று மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

திருநாகேசுவரத்தில் பால்குட ஊா்வலம்

கிடாக்குளம் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

உத்தரமேரூா் வடக்கு மாரியம்மன் கோயில் பால்குட ஊா்வலம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

