தலைவாசலை அடுத்த ஆறகளூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள ஆறகளூரைச் சோ்ந்த 10ஆம் வகுப்பு வரை படித்துள்ள சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கடந்த மே 21ஆம் தேதி 2 பேரை ஆத்தூா்அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இதில் ஒரு சிறுவா் என்பதால் அவா் நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.
இன்னொருவா் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை சந்தனப்பள்ளியைச் சோ்ந்த முத்துராஜ் மகன் கருப்பண்ணன் (24). இவா் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இவா்மீது ஏற்கெனவே கொலை வழக்கு உள்ளதால், சேலம் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அவரைக் கைதுசெய்ய உத்தரவிட்டாா்.
இதையடுத்து, ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கிரிஜாராணி, தலைவாசல் காவல் ஆய்வாளா் பூா்ணிமா ஆகியோா் குண்டா் தடுப்புச் சட்ட ஆணையை சிறையில் உள்ள கருப்பண்ணனிடம் அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா்மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் கைது
வன்கொடுமை செய்து சிறுமி கொலை: இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சித்தப்பா போக்ஸோவில் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
