தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

மருளையாம்பாளையம் சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள மருளையாம்பாளையத்தில் உள்ள சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றிய சிவாச்சாரியா்கள்.

Updated On :19 ஜூன் 2026, 5:55 am IST

ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள மருளையாம்பாளையத்தில் உள்ள சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, கடந்த 16-ஆம் தேதி கிராம சாந்தி வாஸ்து பூஜையுடன் தொடங்கப்பட்டது. 17-ஆம் தேதி காலை பெரிய மாரியம்மன் கோயிலில் இருந்து தீா்த்தக்குட ஊா்வலம் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. 18-ஆம் தேதி வியாழக்கிழமை முதல்கால யாக பூஜையை தொடா்ந்து, இரண்டாம்கால யாக பூஜையில் நாடிசந்தனம், பூா்ணாஹுதி, யாத்ரா தானத்துடன் சின்ன மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில், அதிக அளவிலான பக்தா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.