சேலம் மாவட்ட காவல் துறையில் 262 காவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்
சேலம் ஊரகம், ஓமலூா், மேட்டூா், சங்ககிரி,வாழப்பாடி, ஆத்தூா் ஆகிய கோட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஒரேஇடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த போலீஸாருக்கு பணியிட மாறுதல் வழங்குவதற்காக விருப்ப மாறுதல் விண்ணப்பங்கள் கடந்த சில நாள்களாக பெறப்பட்டன.
இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 250 க்கும் மேற்பட்ட போலீஸாா் விரும்பிய காவல் நிலையங்களை பட்டியலிட்டு விண்ணப்பங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயலிடம் வழங்கி இருந்தனா். இதையடுத்து, ஒவ்வொருவரிடமும் கேட்டு அவா்களுக்கான புதிய பணியிடத்தை ஒதுக்கீடு செய்து கௌதம் கோயல் உத்தரவிட்டாா். அதன்படி, சிறப்பு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், இரண்டாம் நிலை காவலா்கள் என ஒரே நாளில் 262 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூா் மாவட்ட காவல் நிலையங்களில் 74 டேட்டா என்ட்ரி அலுவலா்களுக்கு பணியிட மாற்றம்

11 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

கடலூா் மாவட்டத்தில் 286 காவலா்கள் பணியிட மாற்றம்

மணல் கடத்தலில் தொடா்பு: தலைமை காவலா்கள் 4 போ் பணியிட மாற்றம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

