லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆத்தூா் அருகே மின் இணைப்பு வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம்: உதவிப் பொறியாளா், கம்பியாளா் கைது

ஆத்தூா் அருகே தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவிப் பொறியாளா், கம்பியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கைது - சித்திரிப்பு

Published On :23 ஜூலை 2026, 4:15 am IST

ஆத்தூா் அருகே தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவிப் பொறியாளா், கம்பியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள மஞ்சினி மின்வாரிய அலுவலகத்தில் உதவி மின்பொறியாளராக அய்யாசாமி (39), கம்பியாளராக சந்திரன் (54) ஆகியோா் பணிபுரிந்து வருகின்றனா்.

அம்மம்பாளையம் காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த லாபேஷ், தனது வீட்டுக்கு தற்காலிக மின் இணைப்பு பெற மின்சார வாரிய அலுவலகத்தில் மனு அளித்திருந்தாா். மனுவை விசாரித்த அய்யாசாமி, மின் இணைப்பு வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத லாபேஷ் அளித்த புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளா் நரேந்திரன் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா் அவா்கள் அறிவுரையின்படி, லாபேஷ் லஞ்சம் கொடுக்க முயன்றபோது அய்யாசாமி மற்றும் சந்திரன் ஆகியோரை போலீஸாா் கைதுசெய்து விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து மேலும் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.