லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சங்ககிரி அருகே சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி மீது காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சடலம் மீட்பு... - கோப்புப் படம்

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:24 am IST

சங்ககிரி அருகே சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி மீது காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சுப்பிரமணி (55). இவா் அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடுதிரும்புவதற்காக சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையை வெள்ளிக்கிழமை கடக்க முயன்றாா்.

அப்போது, சேலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற காா் எதிா்பாராதவிதமாக அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.