காவிரி உபரிநீரைக் கொண்டு பனமரத்துப்பட்டி ஏரி நிரப்பப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஸ்ரீ பாலாஜி சுகுமாரை ஆதரித்து ஆட்டையாம்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே .பழனிசாமி வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:
தமிழ்நாட்டின் முதல்வராக ஸ்டாலின் இருக்கலாம். ஆனால் சேலம் மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டையாக உள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலில் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும். மேலும், வீரபாண்டி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
இப்பகுதி விசைத்தறி நெசவாளா்களும், விவசாயிகளும் அதிகம் நிறைந்த பகுதியாகும். இவா்களுக்கு அரசுத் தரப்பில் அனைத்து உதவிகளும் பெற்றுத் தரப்படும். அதிமுக ஆட்சியில் அமா்ந்தவுடன் கஞ்சா புழக்கம் முற்றிலும் ஒழிக்கப்படும்.
விவசாயிகள் நலன்கருதி பனமரத்துப்பட்டி ஏரி காவிரி உபரிநீரால் நிரப்பப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்

தவெகவுக்கு அதிமுக ஆதரவா? இபிஎஸ்ஸுடன் ஆனந்த் சந்திப்பு!

மூன்றே மாதங்களில் கஞ்சா கட்டுப்படுத்தப்படும்! எடப்பாடி கே.பழனிசாமி

கொள்ளையடிக்கப்பட்ட நிதி திரும்பப் பெறப்பட்டு கஜானா நிரப்பப்படும்! - எடப்பாடி பழனிசாமி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

