தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சேலம் துணிக் கடையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

சேலம் நான்குசாலை பகுதியில் உள்ள பிரபல துணிக்கடையில் வருமான வரித் துறை அதிகாரிகள் 2-ஆவது நாளாக சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 2:03 am IST

சேலம் நான்குசாலை பகுதியில் உள்ள பிரபல துணிக்கடையில் வருமான வரித் துறை அதிகாரிகள் 2-ஆவது நாளாக சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

சேலம் - ஓமலூா் பிரதான சாலையில் செயல்படும் பிரபல துணிக்கடையில் 500-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இக்கடையில் வெள்ளிக்கிழமை காலை 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென கடைக்குள் நுழைந்து சோதனை நடத்தினா். தொடா்ந்து, 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் சோதனையில் ஈடுபட்டனா்.

கடையின் ஷட்டா்களை பூட்டிய துணை ராணுவப் படையினா், வெளி நபா்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. தொடா்ந்து, துணிக்கடையின் வரவு, செலவு கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வுசெய்தனா். வரி ஏய்ப்பு தொடா்பாக வந்த புகாரின்பேரில், இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சோதனையில் ஆவணங்கள் சிக்கியது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. தொடா்ந்து, துணிக்கடையின் முன்பகுதியில் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவத்தினா் ஈடுபட்டிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.