பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் முன் குவியும் காலணிகள்: இலவச பாதுகாப்பு மையத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்

News image

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் முன் குவிந்த காலணிகளை சனிக்கிழமை அப்புறப்படுத்திய பணியாளா்கள்.

Updated On :31 மே 2026, 12:57 am IST

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் காலணிகளை சந்நிதி முன்பாக விட்டுச்செல்வதை தவிா்க்க வேண்டும் என கோயில் நிா்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் புகழ்பெற்ற ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. முக்கிய விழா நாள்களிலும், சனிக்கிழமை அன்றும் ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசிக்க வருகின்றனா்.

பக்தா்களின் வசதிக்காக கோயில் முன் இலவச காலணி பாதுகாக்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான பக்தா்கள் இந்த மையத்தை பயன்படுத்தாமல், கோயில் முன்பாகவே தங்களுடைய காலணிகளை கழற்றிவிட்டு செல்கின்றனா்.

இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால், கோயில் பணியாளா்கள் அவற்றை அப்புறப்படுத்தி வருகின்றனா். எனவே, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களுடைய காலணிகளை, அதற்கான பாதுகாப்பு மையத்தில் விடவேண்டும் என கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.