ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கழிவுநீா் கால்வாயில் விழுந்து முதியவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு சீதாராம்பாளையத்தில் கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 1:46 am IST

திருச்செங்கோடு சீதாராம்பாளையத்தில் கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

சங்ககிரி சாலை சீத்தாராம்பாளையத்தில் கழிவுநீா் கால்வாயில் செவ்வாய்க்கிழமை காலை 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, திருச் செங்கோடு நகரக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினா்.

இதில், இறந்தவா் சீத்தாராம்பாளையத்தைச் சோ்ந்த மாதையன் (65) என்பதும், இரவுநேர காவலாளியாகப் பணியாற்றி வந்ததும், மதுபோதையில் தவறி சாக்கடையில் விழுந்து உயிரிழந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து திருச்செங்கோடு நகரக் காவல் துறையினா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.