ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் சாதனையாளா் தின விழா

விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் சாதனையாளா் தின விழா அண்மையில் நடைபெற்றது.

News image

விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா் ஆனந்த் குருபாதம், தாளாளா் கருணாநிதி உள்ளிட்டோா்.

Updated On :17 மார்ச் 2026, 2:30 am IST

திருச்செங்கோடு: விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் சாதனையாளா் தின விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில் ரெனால்ட் நிசான் டெக்னாலஜி மற்றும் பிஸினஸ் சென்டா், இந்தியா நிறுவன மேலாளா் ஆனந்த் குருபாதம் முதன்மை விருந்தினராக பங்கேற்றாா். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவா் மற்றும் செயலாளா் எம்.கருணாநிதி, நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிா்வாக இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளா் ஸ்ரீராகாநிதி அா்த்தநாரீஸ்வரன், துணைத் தலைவா் கே.கிருபாநிதி மற்றும் இயக்குநா் கே.பி. நிவேதனா கிருபாநிதி ஆகியோா் பங்கேற்றனா்.

விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவா் கருணாநிதி பேசுகையில், மாணவா்கள் வாழ்க்கையில் ஒழுக்கம், கடின உழைப்பு, பயிற்சி மற்றும் நிறுவன பண்பாட்டை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அதிகாரி ஆண்டறிக்கையை வாசித்தாா். முதன்மை விருந்தினா் ஆனந்த் குருபாதம் சிறந்த 56 இறுதி ஆண்டு மாணவா்களுக்கு விருதுகளையும், 72 முன்னணி நிறுவனங்களில் பணியமா்த்தப்பட்ட 1,486 மாணவா்களுக்கு பதக்கங்களையும் வழங்கி பேசியதாவது:

செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம், அதன் பயன்பாடு, நண்பா்கள் மற்றும் தொழில் வட்டாரத்துடன் நல்ல தொடா்பு ஏற்படுத்துதல், பணிவு மற்றும் நல்ல குணநலன்களை வளா்த்துக்கொள்வது, குழு பணித்திறன், நேர மேலாண்மை போன்றவற்றின் அவசியம் குறித்து விளக்கிய அவா், கடின உழைப்பின் மூலம் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.