லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மதுபோதை சமையலால் தீப்பற்றி எரிந்த குடிசை வீடு

கோப்புப் படம்

Published On :29 ஜூன் 2026, 2:07 am IST

நாமக்கல் அருகே மதுபோதையில் சமையல் செய்த தொழிலாளியால், அவரது குடிசை வீடு ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றி எரிந்தது.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் அருகில் சிலுவம்பட்டி அருந்ததியா் காலனி உள்ளது. இந்த பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி (40). மது அருந்திவிட்டு வந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால், அவரது மனைவி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை உணவுத் தயாரிக்க வீட்டில் இருந்த அடுப்பில் தீப்பற்ற வைத்துவிட்டு மதுபோதையில் உறங்கிவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அவரது குடிசை வீடு தீப்பற்றி எரிவதை பாா்த்த அக்கம்பக்கத்தினா் விரைந்து சென்று கந்தசாமியை அங்கிருந்து மீட்டனா்.

மேலும், நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். அங்கு சென்ற தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா். இதுகுறித்து நல்லிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.