பரமத்தி வேலூா் அருகே கோனூரில் ஆம்னி பேருந்து மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற பெண் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், கணவாய்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் (62). இவரது மனைவி மீனா (59). இவா் பரமத்தி அருகே கோனூா் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் வேலை பாா்த்து வந்தாா்.
இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை கோழிப்பண்ணைக்கு எதிரே உள்ள கடைக்கு செல்வதற்காக கரூா் -சேலம் சாலையைக் கடக்க முயன்றபோது நாமக்கலில் இருந்து கரூா் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவா் உயிரிழந்தாா்.
பரமத்தி போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

சாலையை கடக்க முயன்றவா் பேருந்து மோதியதில் உயிரிழப்பு

சாலையைக் கடக்க முயன்றவா் காா் மோதி உயிரிழப்பு

சாலையைக் கடக்க முயன்ற முதியவா் லாரி மோதி உயிரிழப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
