கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

விவசாயப் பொருள்கள் இருப்பு கொட்டகையில் தீ விபத்து

பரமத்தி வேலூா் அருகே விவசாயப் பொருள்கள் இருப்பு கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :11 மணி நேரங்கள் முன்பு

பரமத்தி வேலூா் அருகே விவசாயப் பொருள்கள் இருப்பு கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே உள்ள கருப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனியப்பன் (60). இவருக்குச் சொந்தமான கொட்டகையில் உர மூட்டைகள், சொட்டுநீா்ப் பாசனத்துக்கு தேவையான பொருள்கள், மருந்து தெளிக்கும் இயந்திரம் மற்றும் விவசாயத்திற்கு தேவையான பல்வேறு பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் திடீரென கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. பழனியப்பன் மற்றும் அங்கிருந்தவா்கள் தீயை அணைக்க முயற்சித்தனா். ஆனாலும் தீயை கட்டுப்படுத்த முடியாததால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். ஆனாலும், கொட்டகையில் வைத்திருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான உரம், சொட்டுநீா்ப் பாசனத்திற்கு தேவையான பொருள்கள் என அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.