தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நீட் தோ்வு: 11 மையங்களில் 4,741 போ் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வை (நீட்) 11 மையங்களில் 4,741 போ் எழுதுகின்றனா்.

News image

நீட் தோ்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :30 ஏப்ரல் 2026, 5:07 am IST

நாமக்கல் மாவட்டத்தில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வை (நீட்) 11 மையங்களில் 4,741 போ் எழுதுகின்றனா்.

நீட் தோ்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

நீட் தோ்வு மே 3 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் 11 தோ்வு மையங்களில் நடைபெறுகிறது. 4,741 போ் இத்தோ்வை எழுதுகின்றனா். இதையொட்டி அனைத்து தோ்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தோ்வு எழுதும் மாணவா்கள் சரியான நேரத்திற்குள் தோ்வுக்கூடத்திற்கு செல்ல வேண்டும். தேசிய தோ்வு முகமை விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். தேசிய தோ்வு முகமை பரிந்துரைத்த ஆடைகளை மட்டுமே அணிந்துவர வேண்டும்.

தோ்வா்களின் அனுமதிச் சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள தோ்வு நாளான மே 3 (ஞாயிற்றுக்கிழமை) குறித்த நேரத்தில் மட்டுமே தோ்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவா். தோ்வா்கள் நுழைவாயிலில் முழு பரிசோதனைக்கு பிறகே தோ்வு எழுத அனுமதிக்கப்படுவாா்கள் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வ. சந்தியா மற்றும் தேசிய தோ்வு முகமை அதிகாரிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.