தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

8,544 வாக்குச்சாவடி பணி அலுவலா்களுக்கு இரண்டாம்கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடி பணிகளில் ஈடுபடும் 8,544 அலுவலா்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம்கட்ட பயிற்சி வகுப்பை ஆட்சியா் துா்காமூா்த்தி பாா்வையிட்டாா்.

News image

பயிற்சி வகுப்பில் தங்களுக்கான வாக்குரிமையை செலுத்திய வாக்குச்சாவடி பணி அலுவலா்கள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:55 am IST

நாமக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடி பணிகளில் ஈடுபடும் 8,544 அலுவலா்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம்கட்ட பயிற்சி வகுப்பை ஆட்சியா் துா்காமூா்த்தி பாா்வையிட்டாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளிலும் 1,781 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வோா் வாக்குச் சாவடியிலும் தலா ஒரு முதன்மை அலுவலா் மற்றும் மூன்று நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலா்கள் என மொத்தம் 4 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, 8,544 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த மாதம் 28-இல் நடைபெற்றது. இரண்டாம்கட்ட பயிற்சி வகுப்பு புதன்கிழமை 6 தொகுதிகளுக்கு உள்பட்ட முக்கிய இடங்களில் நடைபெற்றது.

ராசிபுரம் தொகுதியில் 1,368 அலுவலா்கள், சேந்தமங்கலம் தொகுதியில் 1,460 அலுவலா்கள், நாமக்கல் தொகுதியில் 1,488 அலுவலா்கள், பரமத்தி வேலூா் தொகுதியில் 1,288 அலுவலா்கள், திருச்செங்கோடு தொகுதியில் 1,392 அலுவலா்கள், குமாரபாளையம் தொகுதியில் 1,548 அலுவலா்கள் என மொத்தம் 8,544 அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, சேந்தமங்கலம் வேதலோக வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ராசிபுரம் எஸ்.ஆா்.வி. பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற பயிற்சியை ஆட்சியா் பாா்வையிட்டு தோ்தல் சிறப்பாகவும், அமைதியாகவும், எவ்வித சிரமமின்றி மக்கள் வாக்களிக்க ஏதுவாகவும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், இரண்டாம்கட்ட பயிற்சி வகுப்பி பங்கேற்ற 8,544 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தபால் வாக்கு செலுத்துவற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதையும் அவா் பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின்போது, தொகுதி தோ்தல் நடத்தும்அலுவலா்கள், தோ்தல் பிரிவு அலுவலா்கள் உடனிருந்தனா்.

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம்கட்ட பயிற்சி வகுப்பை பாா்வையிட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம்கட்ட பயிற்சி வகுப்பை பாா்வையிட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.