தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராசிபுரத்தில் அதிமுக கூட்டணி கட்சி செயல்வீரா்கள் கூட்டம்

ராசிபுரத்தில் அதிமுக கூட்டணி கட்சி செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ராசிபுரம் தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாரை அறிமுகப்படுத்தி பேசிய முன்னாள் அமைச்சா் பி. தங்கமணி.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:16 am IST

ராசிபுரத்தில் அதிமுக கூட்டணி கட்சி செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ராசிபுரம் (தனி) தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாரை அறிமுகப்படுத்தி முன்னாள் அமைச்சா் பி. தங்கமணி பேசியதாவது:

இத்தொகுதியில் எடப்பாடி கே. பழனிசாமியே போட்டியிடுகிறாா் என நினைத்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினா் பணியாற்ற வேண்டும். இத்தொகுதி பாஜக வேட்பாளா் வெற்றி பெற்றால்தான் எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராவாா். இந்த தொகுதிக்கு என்ன தேவை என அறிந்து அதிமுகவும், பாஜகவும் இணைந்து புதிய திட்டங்களை அமல்படுத்தும். தமிழகத்தில் அதிமுக அரசும், மத்தியில் பாஜக அரசும் இணைந்து மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு இரட்டை என்ஜின் ஆட்சி அமைக்கும்.

எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதல்வராவது உறுதி. அதிமுக தோ்தல் அறிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும். அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் திட்டங்களை பெற்று வந்தது. ஆனால், திமுக அரசு சிறுபான்மை வாக்குகளை வாக்குவதற்காக மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது என்றாா்.

கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவா்கள் கே.பி. ராமலிங்கம், வி.பி. துரைசாமி, முன்னாள் அமைச்சா் வி. சரோஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பேசிய வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாா், என்னை வெற்றி பெறச் செய்தால் தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் சுகாதார வசதிகள், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் என்றாா்.

கூட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.