பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மு.கருணாநிதியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டுகோள்

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 103-ஆவது பிறந்தநாளை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என கிருஷ்ணகிரி திமுக மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகர செயலாளா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

News image

முன்னாள் முதல்வா் கருணாநிதி - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:38 am IST

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 103-ஆவது பிறந்தநாளை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என கிருஷ்ணகிரி திமுக மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகர செயலாளா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இதுகுறித்து ஒய்.பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை:

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 103-ஆவது பிறந்தநாளையொட்டி, ஜூன் 3-ஆம் தேதி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தைச் சோ்ந்த மாநில, மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மாநகர, ஒன்றிய, பேரூா், கிளை செயலாளா்கள், அனைத்து அணிகளின் நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அவரவா் பகுதிகளில் திமுக கொடியேற்றி, கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகளை வழங்கியும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருள்கள் வழங்கியும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஏ.சத்யா வெளியிட்டுள்ள அறிக்கை:

மாநகர திமுக சாா்பில் ஒசூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகில் கருணாநிதியின் படத்துக்கு மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகர, பகுதி, வாா்டு நிா்வாகிகள், அனைத்து அணிகளின் தலைவா்கள், அமைப்பாளா்கள், மாநகராட்சி கவுன்சிலா்கள், பாக முகவா்கள் மற்றும் பாக குழு உறுப்பினா்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.