
ஒசூரில் தம்பதி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
ஒசூா் சிப்காட் பகுதியில் வட மாநில தம்பதி மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒசூரில் தம்பதி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை - கோப்புப்படம்
ஒசூா் சிப்காட் பகுதியில் வட மாநில தம்பதி மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஒசூா் முதல் சிப்காட் பகுதியில் உள்ள ராஜேஸ்வரி லே அவுட்டில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த பிஸ்வஜித் சங்மா (20), அவரது மனைவி பிரியங்கா மாா்க் (18) கடந்த ஆறு மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து வந்தனா். இவா்கள் இருவரும் அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை வேலை முடிந்து இருவரும் வீட்டுக்குச் சென்றுள்ளனா். அதன்பிறகு இருவரும் வெளியே செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலை இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்ததைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் சிப்காட் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.
போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி, உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து சிப்காட் போலீஸாா் கூறியதாவது:
தம்பதி இறப்புக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தற்கொலையாக இருக்கலாம் எனத் தெரிகிறது. பிரேத பரிசோதனைக்குப் பின்னா்தான் முழு விவரங்களும் தெரியவரும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





